Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 01:09 PM
By: Manigandan Raja
கணவன் - மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்னை. பெற்றோர் தலையிட்டும் தீராத சண்டை. மனைவியை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரன். தலைமறைவாக உள்ள கணவனை வலைவீசி தேடும் போலீஸ். மனைவி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?
கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்த மனைவி
காலை 10 மணி. தெனாலி பகுதிய சேந்த சாய் என்பவர் பயங்கர கோபத்தோட அவசர அவசரமா தன்னோட பைக்க எடுத்துட்டு மின்னல் வேகத்துல கிளம்பிருக்காரு. இதபாத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சாயோட வீட்ல ஏதோ பிரச்னைன்னு நினைச்சு ஓடிப் போய் பாத்துருக்காங்க. அங்க அவரோட மனைவி கழுத்துல காயங்களோட கொடூரமான முறையில உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சுருக்காங்க. அடுத்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க மூலமா எல்லா விஷயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், கணவன் சாய்ய வலைவீசி தேடிட்டு இருக்காங்க.
14 வருடங்களுக்கு முன் நடந்த சாய் - ஷிரீஷா திருமணம்
ஆந்திராவுல உள்ள தெனாலி பகுதிய சேந்த சாய் - ஷிரீஷா தம்பதிக்கு 14 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்காங்க. கல்யாணமான புதுசுல இந்த தம்பதி ஹைதராபாத்துல தங்கி மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருந்தாங்க. அங்க சாய் ஒரு கேட்டரிங் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. ஷிரீஷா பியூட்டி பார்லர்ல வேலை செஞ்சுட்டு இருந்துருக்காங்க. ஷிரீஷா பியூட்டி பார்லர்ல வேலை பாக்குறது சாய்க்கு சுத்தமா பிடிக்கல. இதனால கணவன் மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுட்டு இருந்துருக்கு. இத கேள்விப்பட்டு ரெண்டு பேரோட பெற்றோரும் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திருக்காங்க. அடுத்து இந்த தம்பதி சொந்த கிராமமான தெனாலிக்கே வந்து வசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அங்க வந்ததுக்கு அப்புறமும் ஷிரீஷா கணவனோட சொல்பேச்ச கேட்காம பியூட்டி பார்லர்க்கே வேலைக்கு போய்ருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved