Also Watch
Read this
By: Web Team

மதுரையில் பந்தல்குடி கால்வாயை துணிகளால் முதலில் மறைத்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அதிமுக, 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை திமுக அரசு மறைக்க முயல்வதாக கடுமையாக சாடியது.
தமிழ்நாட்டின் 2 ஆவது மாநகராட்சியை கல்லும், மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என குப்பை மாநகராட்சியாக மாற்றி கற்காலத்திற்கே கொண்டு சென்றதே திமுகவின் சாதனை என குறிப்பிட்டுள்ளது.
மேலும் தனது அப்பா பெயரின் விளம்பரத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு நூலகம் மட்டுமே சாதனை எனில் இதை விட பெரும் சோதனை மதுரை மக்களுக்கு என்ன இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளது.