Also Watch
Read this
By: Web Team

முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என சுந்தரா டிராவல்ஸ் யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங் என நர்த்தனம் ஆடுவதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
அனைவரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல், இபிஎஸ் டேபிள்களுக்கு அடியில் மீட்டிங் போட்டதாக பதிலடி கொடுத்தார்.
மேலும், மின்கட்டண உயர்வை குறித்து பேசி வரும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார் என்றும், 414 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை 868 ரூபாயாக உயர்ந்திருப்பது எதிர்கட்சி தலைவருக்கு தெரியாதா? இல்லை எப்போதும் போல நடிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.