Also Watch
Read this
By: Web Team

மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது வாரிசு அரசியல் கூடாது என்ற கொள்கையை கொண்ட கமல், ராஜ்ய சபா சீட் கொடுத்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த மொழி பெரியது என கருத்து சொல்ல முடியாது என்றும் அவரவருக்கு அவர்களது தாய்மொழி முக்கியம் என கன்னட மொழி குறித்த கமலின் சர்ச்சையான கருத்துக்கு பதிலளித்தார்.