Also Watch
Read this
By: Web Team

2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனையடுத்து காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்தது. இந்நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் போட்டியை இந்தியாவில் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.