ரின்கு சிங் திடீர் விலகல் : டி20 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் திடீரென விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த, அவரது தந்தை கான்சந்த் சிங், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த உடன் அவர், சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். Related Link டி20 உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப்போட்டி