டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிய்யை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஆட மறுப்பு தெரிவித்த வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், வங்கதேசத்துக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தானும் தொடரில் பங்கேற்காது என தகவல் வெளியானது. பாகிஸ்தான் மோதும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Related Link "இந்தியாவை புறக்கணித்தால் பாகிஸ்தானுக்குதான் பாதிப்பு"