இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 3க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை சேர்த்தது. சாம் கரன் அதிகபட்சமாக 58 ரன்களை சேர்த்தார். பின்னர் 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் யாரும் சோபிக்காததால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Related Link தற்போதுள்ள இந்திய டி-20 கிரிக்கெட் அணி அபாயகரமானது