Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 03:03 PM
By: Manigandan Raja

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 3க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை சேர்த்தது. சாம் கரன் அதிகபட்சமாக 58 ரன்களை சேர்த்தார்.
பின்னர் 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் யாரும் சோபிக்காததால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved