Also Watch
Read this
By: Web Team

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொன்றவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. உள்ளூர் உணவுகளை விற்பனை செய்யும் Tor Kor சந்தையில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது.துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லை மோதல் நடந்து வரும் அதனுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.