Also Watch
Read this
By: Manigandan Raja

நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீளும் படிப்புகள்
அமெரிக்காவில் உயர்க்கல்வி பயின்று வரும் மற்றும் பயில திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்கால கனவிலும், வேலைவாய்ப்பு திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசா மாற்றங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது.
1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முழுவதும், முறையான அரசு கண்காணிப்பு இல்லாமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின்படி, மாணவர்களும், கலாசார பார்வையாளர்களும், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, அந்நாட்டிலுள்ள முக்கிய பாலங்களை தகர்த்தது. பாலங்கள் மட்டுமின்றி ஓமன் வளைகுடா பகுதியில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் சபஹர் துறைமுகத்தில், வணிக மற்றும் கடற்படை போக்குவரத்தை கண்காணிக்கும் கண்காணிப்பு கோபுரமும் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலில், 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.