Also Watch
Read this
By: Manigandan Raja

பஞ்சாபில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும்
பஞ்சாபில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாபில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் என்றும், இத்தகைய பணிகளை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும், பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிகிச்சை அளிக்க மறுத்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கண்டனம்

காசியாபாத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிகிச்சை கிடைக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளின் இந்த செயல் இரக்கமற்றது என்று நீதிபதிகள் சாடியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து ஆய்வு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அமைச்சா்கள் குழு ஆலோசனை மேற்கொண்டது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.