Also Watch
Read this
By: Web Team

இந்திய விண்வௌி வீரர் சுபன்ஷூ சுக்லா நாளை மறுநாள் சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்ல உள்ளார்.
அமெரிக்க விண்வௌி ஆய்வு மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வௌி நிலையத்துக்கு அனுப்ப உள்ளது.
இதில் இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை சேர்ந்த விண்வௌி வீரர்களும் செல்ல உள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுநாள் சுக்லா உள்ளிட்ட விண்வௌி வீரர்களுடன் அமெரிக்காவின் நாசா விண்வௌி தளத்தில் இருந்து டிராகன் விண்கலம் தன் பயணத்தை தொடங்க உள்ளது.
28 மணிநேரத்தில் விண்வெளி நிலையத்தை விண்கலம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved