Also Watch
Read this
By: Web Team

அணு ஆயுத பரவல் தடைச் சட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என்பதுடன், அணு ஆயுத தொழில்நுட்பத்தை இதர நாடுகளுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.
தற்போது தங்களை எந்த காரணமும் இன்றி அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் தாக்கி வருவதால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான சட்ட திருத்தத்தை தங்களது நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாக்கவி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலும் மாபெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக ஈரான் தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved