மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் : அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது அண்டை நாடுகளான அரபு நாடுகளிலும் தாக்குதல் நடந்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியான் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஈரானுக்கு கிடையாது என்றார். அண்டை நாடுகள் மீதான ஏவுகணை தாக்குதல்களை நிறுத்தி வைக்க நாட்டின் தற்காலிக தலைமை கவுன்சில் முடிவு செய்து விட்டதாகவும் அதிபர் தெரிவித்தார். எனினும் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். Related Link நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தானியர்