Also Watch
Read this
By: Manigandan Raja

60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய திட்டம்
அமெரிக்காவில் வேலை இழந்த H-1B மற்றும் இதர விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய திட்டத்தை அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத் துறை பரிசீலித்துள்ளது. இந்த முன்மொழிவு தற்போது ஆய்வில் உள்ளதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அப்படி இந்த விசா விதிமுறை அமலுக்கு வந்தால், வேலையை இழக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அவகாசம் கிடைக்காமல் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு படுகாயம்
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டு உயர்மட்டத் தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. பாகிஸ்தானில் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், டீசல் 130 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved