Also Watch
Read this
By: Manigandan Raja

48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்
அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் பிரதமர் அலி அல்- சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
காசா நகரின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
காசா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அல் நஸ்ர் ((Al-Nasr)) பகுதியில் குடியிருப்பு கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜைதுன் ((Al-Zeitoun)) பகுதியில் பொதுமக்கள் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரஷ்ய எரிபொருள் கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷ்ய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 8பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் தாம்போவ் பிராந்தியத்தில் உள்ள முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான வைல்ட்பெர்ரிஸின் இரண்டு பெரிய கிடங்குகள் மற்றும் நோகின்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது தாக்குதலை நடத்தியுள்ளது.