Also Watch
Read this
By: Manigandan Raja

விஷம் வைத்து கொல்லப்பட்டார் :
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ((Alexey Navalny)), 2024-ல் ஆர்க்டிக் சிறையில் இறந்த நிலையில், அவர் அரிய வகை டார்ட் தவளையின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட விஷம் ((Epibatidine toxin)) மூலம் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய 5 நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த விஷ பிரயோகத்திற்கு ரஷ்ய அரசே காரணம் என்றும், இது வேதியியல் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அந்த நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிகாரிகள், இவை வெறும் மேற்கத்திய பிரச்சாரம் என தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved