Also Watch
Read this
By: Web Team

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஐ கடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது.
இரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்கள் தரைமட்டமானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved