Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் இன்று சந்தித்து பேச உள்ளார். சமீப நாட்களாக இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், அடுத்ததாக ஹெச் 1 விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி இந்தியர்களை கோபமடைய செய்தார்.
இந்நிலையில் தான், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேச உள்ளார். ஐக்கிய நாடுகளின் 80ஆவது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர், டிரம்பை சந்தித்து தனியாக ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.