தமிழ்நாடு

மதுவை பாட்டிலில் விற்கும் பொழுது..ஆவின் பாலை விற்க முடியாதா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

டாஸ்மாக்கில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆவின் பாலை பாட்டில்களில் அடைத்து விற்க முடியுமா என்பது குறித்து ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்பதற்கு மக்களிடம் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மதுபோதையில் உள்ளவர்கள் மதுபாட்டிலை கவனமாக கையாளும் போது, சுயநினைவுடன் இருக்கும் மக்களால் கண்ணாடி பாட்டிலை கையாள முடியாதா எனக் கேள்வி எழுப்பினர். இதுசம்பந்தமாக புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

00 Comments

Leave a comment