வடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் ஆகையால் வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment