மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இளைஞர் மர்மநபர்களால் ஆயுதங்களால் வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், மற்றும் சிவகங்கை திருப்பாச்சேத்தியை சேர்ந்த சோனை ஆகிய இருவரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட போலீசார் இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment