Also Watch
Read this
By: Web Team

கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து தீபிகா படுகோனே விலகிய நிலையில், அவரது கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவைத் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான கல்கி திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளையும், வசூல் ரீதியாகவும் வெற்றியையும் பெற்றது. .இதனிடையே கல்கி - 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோனே பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved