Also Watch
Read this
By: Web Team

சென்னை அருகே, பூந்தமல்லியில் பெண்ணிடம் சிறுக சிறுக 120 சவரன் தங்க நகை, மற்றும் 20 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில், எண்ணூர் காவல் நிலைய காவலர் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த சிவா மீது மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சில வாரங்களுக்கு முன், எண்ணூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் சிவா, அங்கு வசிக்கும் பெண் ஒருவருடன் பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவா மோசடி செய்ததாக அந்த பெண் அளித்த புகாரை விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved