Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்குச்சாவடி இடமாற்றம் :
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை அடுத்த பாலேகுப்பம் என்ற கிராமத்தில் கடந்த 50-ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையம் எண் 1 நம்பர் மையம் திடீரென வேறுொரு இடத்திற்கு மாற்றப்பட்டதால் உள்ளூர் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மையத்தை மாற்றியமைத்தது தொடர்பாக எந்த முன் அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய வாக்குச்சாவடி இடம் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், முதியோர் மற்றும் பெண்கள் அங்கு செல்வது கடினம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.