Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பூதிமுட்லு கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருடைய வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனே வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் மலைப்பாம்பு வீட்டிற்குள் நுழைய முயன்ற நிலையில், பொதுமக்களே சேர்ந்து பத்திரமாக பிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved