Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவர் தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்காக அழைத்து வந்தபோது நீலமங்கலம் மேம்பாலம் அருகில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் இரண்டும் போட்டி போட்டு சென்றதில் இருசக்கர வாகனம் இரண்டும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஜான் பாஸ்கோ காரை திருப்பியபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved