Also Watch
Read this
தமிழக முதலமைச்சரும் உச்ச நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23ஆம் தேதி வெளியானது.

என்ன தான் படம் ஏற்கெனவே இணையத்தில் கசிந்து இருந்தாலும் முதல் நாள் வசூலில், மாஸ் காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. தொழில்துறை கண்காணிப்பு தளமான Sacnilk வெளியிட்டுள்ள தகவல்படி 'ஜனநாயகன்' முதல் நாளில், இந்தியாவில் 50 கோடியே 28 லட்சம் ரூபாயும், வெளிநாடுகளில் 30 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 'ஜனநாயகன்' முதல் நாள் வசூலாக உலகளாவிய அளவில், 80 கோடியே 28 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.

பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது 'கான்சிட்டி'
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த 'கான்சிட்டி' திரைப்படம் கடந்த ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏமாற்றாதே, ஏமாறாதே கான்செஃப்டில் உருவான இந்தப்படம் 6 கோடி ரூபாய் வரைக்கும் வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'கான்சிட்டி' திரைப்படம் வெளியானது.

பிரபல பாலிவுட் நடிகர் வேண்டுகோள்
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி ட்வீட் செய்து உறுதி அளித்ததால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்து உள்ளார். இந்நிலையில், இன்று தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.