Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியிடம் ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்களை, போலீஸார் மகாராஷ்டிரா சென்று கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த நகை வியாபாரி விஜயராஜா, காரைக்குடியில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1 கிலோ 700 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை கடந்த 4-ஆம் தேதி கொண்டு சென்றார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற கொள்ளை கும்பல், காரை வழிமறித்து தங்கக் கட்டியை கொள்ளையடித்துச் சென்றது. விசாரணையில் நகைக்கடை ஊழியர் அபிமன்யு, தனது மகாராஷ்டிரா நண்பர்களான சேட்டான் பிரசாத், துக்காராம் தேவ்பா, ரிஷிகேஷ், சுமித் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved