Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியதில் 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். திருவலத்திலிருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, பொன்னை அருகே மாதாண்டகுப்பத்தில் விபத்திற்குள்ளானது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கங்கையம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்து பொன்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved