Also Watch
Read this
By: Web Team

ஓ.என்.ஜி.சி. வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி விவசாய சங்கத் தலைவர் பி. ஆர் பாண்டியன் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved