Also Watch
Read this
By: Web Team
டிட்வா புயல் காரணமாக, சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணியில் ஈடுபட ஆறு இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக, டிஐஜி ஹரிஓம் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்தார். மழையால் பாதிப்பு, மீட்பு பணியில் ஈடுபட தமிழ்நாட்டில் 22, புதுச்சேரியில் 3 என மொத்தம் 25 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் 6 குழுக்கள் உள்ள நிலையில், தேவைப்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் வருவார்கள் என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved