Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
ஆந்திராவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved