Also Watch
Read this
By: Web Team

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் சென்னை தண்டையார்பேட்டையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.