Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் செயல்பட்ட பாதாள சாக்கடை திட்டம் பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்படவில்லை எனவும்,
ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திருப்போரூர் மருத்துவமனை முறையாக செயல்படாமல் மக்கள் சிரமமடைவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
திருப்போரூர்- நெம்மேலி சாலையை நான்கு வழிச்சாலையாக அமைத்தல், திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved