Also Watch
Read this
By: Web Team

நவராத்திரியை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற திருநள்ளார் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், ஸ்ரீபிரணாம்பிகை தாயார், அன்னபூரணி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில், நவராத்திரி ஏழாம் நாளில், அம்பாள் ஸ்ரீபிரணாம்பிகை தாயார், ஸ்ரீ அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளினார். பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபிரணாம்பிகை தாயாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.