Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அப்போது அதன் அருகே இருந்த மின்கம்பமும் உடைந்து சாய்ந்தது. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட கிராம மக்கள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இரவு நேரத்தில் தொட்டி இடிந்த விழுந்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாரம்பாடி கிராம மக்கள் கடந்த 28 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அந்த தொட்டியின் தூண்கள் சேதமடைந்துள்ளது குறித்து பலமுறை முறையிட்டும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர்.