Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மற்றும் திருநீர்மலையை இணைக்கும் அண்ணா சாலை குண்டு குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதலே கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மேலும் சாலையை முறையாக அமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved