Also Watch
Read this
By: Web Team

கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்காவல் படையினராக பணியில் சேர நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராகவும், மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 45 நாட்கள் பயிற்சி முடித்த பின்னர் கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய அனுப்பப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved