Also Watch
Read this
Posted on: Feb 26, 2026 12:10 PM
By: Manigandan Raja

வாக்குவாதம் :
சென்னையை அடுத்த படப்பை அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
ஹூண்டாய் தொழிற்சாலையில் பணியாற்றும் ஓட்டுநர் மணிகண்டன் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வேகமாக வந்த தொழிலதிபர் தேவதாஸ் என்பவரும் அவரது மகன் அர்ஜுனும் எதற்காக காருக்கு வழி விடாமல் செல்கிறாய் எனக்கூறி பேருந்தை வழிமறித்துள்ளனர்.
இருவரும் துப்பாக்கியை காட்டி ஓட்டுநர் மணிகண்டனை மிரட்டியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved