Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் நண்பர்களுக்கிடையே ஃபோனில் ஃபிராங்க் ( PRANK ) செய்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்மேடு பகுதியை சேர்ந்த அரசு என்ற இளைஞருக்கு அவரது நண்பன் அழகுபாண்டி செல்போனில் போலீஸ் பேசுவது போல் மிமிக்ரி செய்து பிராங்க் செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அழகுபாண்டியின் அண்ணன் செல்லப்பாண்டியை அரசு முறைத்துப் பார்த்ததால்,
தம்பிக்கு அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் செல்லப்பாண்டி அரசு வீட்டிற்கு கதவை உடைத்துக் கொண்டு சென்று அரசை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததோடு,
தடுக்க வந்த அவரது தாய் மற்றும் தங்கையை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved