Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்த நிலையில் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அருவியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.