Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீரகம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராம், கஸ்தூரி தம்பதிக்கு கடந்த 3-ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அதே பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில்,
இது குறித்து சுகாதாரத்துறையினர் அளித்த தகவலை தொடர்ந்து போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved