Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே மருங்காபுரிக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இன்று காலை ஏற்பட்ட திடீர் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக பெருக்கெடுத்து மான்பூண்டி ஆற்றில் கலந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை நிறுத்தினர்.

இருப்பினும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக சென்றது. மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இதுபோன்று தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீர் வீணாவதை தடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.