Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்காக நடந்து கொண்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
கோயில் மூலவர் கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றுவதற்கு முன்பு முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மேலே சென்ற நிலையில் செல்வப்பெருந்தகைக்கு ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் ஆளுநருக்கு மரியாதை கொடுக்க, சட்டமன்ற உறுப்பினர் பின்னால் இருக்க வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களா? என தெரியவில்லை என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved