Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் நீர் தென்பெண்ணை ஆற்றிற்கு முழுமையாக வெளியேற்றபடும் நிலையில் குவியல் குவியலாக ரசாயன நுரைகளுடன் நீர் ஓடுகிறது.
கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 981 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரை மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் அணையிலிருந்து பாசனத்துக்காக கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் 5 அடி உயரத்துக்கு நுரை தேங்கிவுள்ளது.