Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப் பணித்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 169 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 33 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறையில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு 45 பேருக்கும், பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு 165 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved