Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகமும், மீன் சந்தைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ,
என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved