Also Watch
Read this
By: Fyrose Banu

தாளவாடி அருகே தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டபுரம் கிராமத்தில் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை மற்றும் வாழை தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் 200 க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை தின்றும், 70 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்தும் சேதம் செய்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதம் அடைந்த வாழை மற்றும் தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.