Also Watch
Read this
By: Web Team

திருச்சி மேற்கு தாசில்தார் முறைகேடான செயலுக்கு துணை போவதாக குறைதீர்ப்பு கூட்டத்தின் போது அவரது அலுவலகத்தை பூட்டி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு மூர்த்தி என்பவரும் அவரது மனைவி வசந்தாவும் விற்று லாபம் பார்த்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், பாப்பா குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வரும் நஞ்சை நிலத்தில் கற்களை கொட்டி வைத்து சிலர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும்,
சுதந்திர போராட்ட தியாகி செல்லசாமிக்கு கொடுத்த நிலத்தை தாசில்தார் வேறொருவருக்கு பட்டா மாற்றி கொடுத்ததாகவும் விவசாயிகள் சாடினர்.